Connect with us

CINEMA

அந்த நடிகர் தனது அறைக்கு வந்ததாக பரபரப்பை கிளப்பிய விசித்ரா.. “அய்யோ அவர் ரொம்ப நல்லவர்னு”.. கொடி தூக்கும் பிரபல 90ஸ் நடிகை..

நடிகை விசித்திரா தமிழில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட துணை கதாபாத்திர நடிகையாக இருந்தவர் விசித்ரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்து புகழ்பெற்றார். 2002க்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். குடும்ப வாழ்க்கைக்குள் சென்றவர் 3 ஆண் பிள்ளைகளை பெற்று முழு நேர குடும்ப பெண்ணாக மாறிப் போனார்.

#image_title

   

நீண்ட இடைவேளிக்கு பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தவர் அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 93நாட்களை கடந்து பிக் பாஸில் இருந்து வரும் அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த நிகழ்ச்சியில் அவரவர் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் விசித்திரா தனக்கு சினிமாவில் நேர்ந்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்தார். அதில் கூட்டமாக ஒரு சீனில் நடித்துக் கொண்டிருந்த போது, சிலர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், தங்கியிருந்த அறையை பலர் தட்டி தொந்தரவு செய்ததாகவும் கூறியிருந்தார்.

#image_title

அந்த சம்பவத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சில காலம் வெளியேறியதாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருந்தார். அவர் சொல்லி இருந்தது தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் படம் தான் என சமூக வலைதளங்களில் கூறப்பட்ட நிலையில், இது குறித்து நடிகை டிஸ்கோ சாந்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இது போல் தனக்கு நடந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பேன் எனவும், விசித்திராவும் தைரியமானவர் தான் ஆனால் ஏன் அவ்வளவு உடைந்து போனார் என தெரியவில்லை எனவும், அதுமட்டுமில்லாமல் பலர் தெலுகு நடிகர் பாலக்ரிஷ்ணாவை கூறுகிறார்கள், ஆனா அவர் மிகவும் நல்ல மனிதர் நான் அவருடன் அவருடைய குடும்பத்தாருடன் பணியாற்றி உள்ளேன் எனவும் கூறியிருக்கிறார் நடிகை டிஸ்கோ ஷாந்தி.

#image_title

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top