தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர்.
இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் தனது உடல் எடை வெகுவாக குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதைத் தொடர்ந்து அவரது இந்த மாற்றத்திற்காக காரணங்களாக பல வதந்திகளும் பரப்பப்பட்டது. தற்பொழுது நடிகர் ரோபோ ஷங்கர் ஜிம்மிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை தேற்றி வருகிறார். இது’தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
நேற்று சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக மழை விடாது பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் தற்பொழுது வரை பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தால் சாதாரண மக்கள் மட்டுமல்ல சினிமா பிரபலங்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
நடிகர் ரோபோ சங்கர் தான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது வெள்ளத்தில் சிக்கி காயமடைந்ததாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், ‘மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பும்போது தகரம் ஒன்று நீரில் மிதந்துகொண்டிருந்ததை பார்த்த அவர், அதனை அப்புறப்படுத்த முயன்ற போது அந்த தகரம் ரோபோ சங்கரின் காலில் கிழித்து காயம் ஏற்பட்டுள்ளதாக எமோஷனலாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…