தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உன்னை நினைத்து. இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து சினேகா, லைலா மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பூவே உனக்காக, சூரியவம்சம் மற்றும் வானத்தைப்போல என மெகா படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன் அடுத்ததாக மீண்டும் விஜயுடன் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் தான் உன்னை நினைத்து. விஜயை வைத்து சில நாட்கள் படபிடிப்போம் நடத்தப்பட்ட நிலையில் கதையின் கிளைமாக்ஸ்சில் விஜய்க்கு கடைசி வரை உடன்பாடு இல்லாததால் விஜய் படத்திலிருந்து விலகவே சூர்யாவை விக்ரமணா படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார்.
இவ்வாறு உருவானது தான் உன்னை நினைத்து திரைப்படம். 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்றுவரை படம் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக உள்ளது. என் நிலையில் உன்னை நினைத்து திரைப்படம் குறித்து இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யாவின் உன்னை நினைத்து திரைப்படத்தின் உரிமையை வேலூரை சேர்ந்த பிரபலம் ஒருவர் தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த நபர் செல்வதற்கு முன்பு இந்த படத்தை கன்னட ரீமேக்கில் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்துக் காட்டுகிறேன் என்று சவால் விட்டு சென்றுள்ளார்.
சில நாட்கள் கழித்து எனக்கு பெங்களூரில் இருந்து தொடர்ந்து போன் கால் வந்தது. என்ன என்று விசாரித்தால் உன்னை நினைத்து திரைப்படத்தின் ரீமேக்கை அப்படியே கன்னடத்தில் அதே கதையை வைத்து எடுத்திருப்பதாக சொன்னார்கள். உடனே பதறிப் போய் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று அங்கு தெரிந்த நண்பருக்கு போன் செய்து அழைத்து டிக்கெட் வாங்கி தர சொன்னேன். டிக்கெட் வாங்கிட்டு தியேட்டருக்கு போய் படம் பார்த்தால் முதல் பாதி எதுவுமே புரியல, ஏனென்றால் உன்னை நினைத்து படத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் பிறகு இரண்டாம் பாதியை பார்த்தால் அப்படியே அனைத்து கதையும் உன்னை நினைத்து கதையைப் போலவே இருந்தது. கடைசியாக ஹீரோயினியை ரயிலில் ஏற்றி அனுப்பும் காட்சி வரை அனைத்துமே அப்படியே இடம் பெற்று இருந்தது.
அந்தப் படத்தில் நடித்த கிருஷ்ணா என்ற ஹீரோ சிவகார்த்திகேயன் போல ஒரு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் பிறகு ஹீரோவாக நடிக்க வந்துள்ளார். எனக்கு அதைப் பார்த்து ரொம்ப ஷாக் ஆயிருச்சு. உடனே அங்க கம்ப்ளைன்ட் பைல் பண்ணிட்டு நான் வந்துட்டேன். பிறகு எல்லோரும் சமரசம் பேசிய பிறகு ஒரு சொற்பத்தொகையை எனக்கு வாங்கி கொடுத்தாங்க. அத பாத்ததும் அன்னைக்கே அந்த நபர் கேட்டப்ப படத்தின் உரிமையை கொடுத்திருந்தார் இன்னிக்கி இவ்வளவு அலுப்ப காசுக்கு வந்து நின்னுருக்க வேண்டாம் என்ற தோனுச்சு. தயாரிப்பாளர் அன்னைக்கு செஞ்ச தப்பால் என்னுடைய மொத்த பேரும் போயிருச்சு என்று விக்ரமன் புலம்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…