Categories: சினிமா

கதை சொல்லிட்டு இருக்கும் போதே பாதியிலேயே கிளம்பி போன விக்ரம்.. சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த இயக்குனர் விஜய் மில்டன்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவர் எத்தனையோ திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சேது திரைப்படம் மூலமாகத்தான் தனக்கென ஒரு புகழை சினிமாவில் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தன்னுடைய கேரக்டருக்கு தகுந்தது போல உடலை மாற்றிக் கொண்டு நடிப்பதில் பெயர் போனவர். குறிப்பாக ஐ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இறுதியாக இவர் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. அடுத்தபடியாக எஸ்யூ அருண்குமார் இயக்கியுள்ள வீரதீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.

விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது விக்ரம் நடிக்க உள்ள 63 வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மண்டேலா மற்றும் மாவீரன் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வினுடன் விக்ரம் கைகோர்த்துள்ளார். இது திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. இப்படியான நிலையில் விக்ரம் குறித்து பிரபல இயக்குனர் விஜய் மில்டன் சமீபத்தில் நடித்த பேட்டியில், முதலில் விக்ரமிடம் 10 எண்றதுக்குள்ள படத்தின் கதையை சொல்ல முயற்சி செய்தேன். அப்போது சரியா அவர் கதையை கேக்கல. அதன் பிறகு கோலி சோடா திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் கழித்து எனக்கு போன் பண்ணாரு.

நான் தான் விக்ரம் பேசுறேன் எனக்காக உங்க கிட்ட ஏதாவது கதை இருக்கா என்று கேட்டார். இருக்கு சார் சொல்றேன் என்று சொன்னதும் கோலி சோடா படத்தை பாத்துட்டு என் மனைவி படம் ரொம்ப நல்லா இருக்கு அவர்கிட்ட நீங்க பேசுங்க என்று சொன்னாங்க. நீங்க நேர்ல வாங்க பேசலாம் என்று விக்ரம் சொன்னார். நானும் வீட்டுக்குப் போய் கதையை சொன்னதும் பாதிக்கதை சொல்லி முடித்ததும் அவர் பாதியிலேயே எழுந்து போயிட்டாரு. அடுத்த பாதி கதையை சொல்வதற்கு நான் அமர்ந்து கொண்டிருந்தபோது என்ன பதில் சொல்வார் என குழம்பிக் கொண்டிருந்தேன்.

அப்போது விக்ரம் சார் மனைவி வெளியில் வந்து படத்தோட கதை ரொம்ப நல்லா இருக்குன்னு உள்ள குதிச்சிட்டு இருக்காரு. வழக்கமா முதல் பாதி கதையை கேட்டுட்டு உள்ள வந்து நீங்க ஏதாவது வெளியில போய் சொல்லி அவங்கள அனுப்பிடுங்க இரண்டாவது பாதியை எப்படி கேட்கிறது என்று தெரியவில்லை என்று தான் சொல்லுவாரு. ஆனா உங்க கதை ரொம்ப புடிச்சி போய் அவ்வளவு சந்தோசமா குதிச்சிட்டு இருக்காரு என்று சொன்னாங்க. எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. அதன் பிறகு தான் பத்து என்றதுக்குள்ள படம் உருவானது என விஜய் மில்டன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

தமிழ்நாட்டின் முதல் ஓட்டு..! காலை 6.45 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் குமார்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…

45 seconds ago

குடும்பத்தோடு வந்து ஓட்டு போட்ட நடிகர் கென் கருணாஸ்.. வைரலாகும் புகைப்படம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…

10 minutes ago

காலையிலேயே ஜனநாயகக் கடமையை ஆற்றினார் சூப்பர்ஸ்டார்.. மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…

13 minutes ago

“ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்” ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு விஜய் சொன்ன அந்த ‘பவர்ஃபுல்’ மெசேஜ்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…

18 minutes ago

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

36 minutes ago

மின்னஞ்சல் அனுப்பினாலே போதும்…! கைநிறைய சம்பளத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…

56 minutes ago