#image_title
கூலி திரைப்படத்தின் டீசர் குறித்து பதிவிட்டு இருந்த நடிகர் கார்த்திக்கின் இன்ஸ்டா பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினிகாந்த் அவர்களை வைத்து தலைவர் 171 என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
லோகேஷ் கனகராஜ் பொதுவாக டைட்டிலேயே டீசராக வெளியிடுவார். கமலின் விக்ரம் திரைப்படத்திலும் விஜயின் லியோ திரைப்படத்திலும் கூட இவர் இதே டிரெண்டை பின்பற்றி இருந்தார். தற்போது அதே வகையில் கூலி படத்தின் டைட்டில் டீச்சரும் வெளியானது. இதை பார்த்த நடிகர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில் எல்லா ஸ்டார்களின் படங்களின் டீசரும் ஒரே மாதிரி இருக்கின்றது. ஹீரோ வருவதை ஒரே மாதிரி பில்டப் கொடுத்து டீசர்கள் செய்து வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி டீசர் வெளியாகும் போது அது நன்றாக இருப்பதாக எண்ணி நாமே ஏமாந்து கொள்கிறோம் என்று கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து இருந்த வெங்கட் பிரபு இந்த வீடியோவில் அவர் சொல்வது உண்மைதான். எங்களைப் போல் கமர்சியல் படங்கள் எடுப்பவர்களை பற்றி தான் அவர் கூறுகிறார். ஆனால் நாங்கள் ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்களா? என்று கார்த்திக் பேசிய வீடியோவை ஷேர் செய்து பதில் அளித்து இருக்கின்றார். இந்த பதிவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…