தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனால் கடந்த சில படங்கள் இவருக்கு அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். பொன்னியின் செல்வன் திரைப்படம் வரவேற்பை பெற்றிருந்தாலும், இவர் தனியாக நடித்து வெளியான சமீபத்திய படங்கள் எதுவும் வெற்றி கொடுக்கவில்லை.
பூமி என்ற திரைப்படத்தில் தொடங்கி அகிலன், சைரன், இறைவன் என அடுத்தடுத்து திரைப்படங்கள் ஜெயம் ரவிக்கு தோல்வியை மட்டுமே கொடுத்தது. இந்நிலையில் ஜெயம் ரவிக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்து இருக்கின்றது. தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் இப்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் ஒன்று நடிகை இருக்கின்றார்.
ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது. இந்த திரைப்படம் ஜெயம் ரவி கெரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றும் கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராக உள்ளது என்று குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்க உள்ளார்.
மேலும் இந்த திரைப்படம் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி திரைப்படம் போல் இருக்கும் என்றும் கண்டிப்பாக ரசிகர்கள் கவரும்படி படம் இருக்கும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து நல்ல லாபத்தை பெற்று இருக்கின்றது. வேல்ஸ் நிறுவனம் அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்திற்கு ஜெயம் ரவியை வைத்து முதலீடு செய்ய உள்ளனர். இந்த படமும் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…
மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…
பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது…
பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்…
இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…