தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்பொழுது இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து, தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது நடிகை ஜோதிகா தனது தோழி ஒருவருடன் இமயமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய இதை பார்த்த ரசிகை ஒருவர் , ‘சூர்யா நீங்க இல்லாத இந்த நாட்களில் சந்தோசமாக இருப்பார்’ என கமெண்ட் செய்ய, உடனே ஜோதிகா அந்த கமென்டிற்கு ,’நீங்க இப்படியே நெனச்சுக்கிட்டு இருங்க’ என்றும், ‘உங்களுக்கு எந்த வேலையும் இல்ல. அதனால தான் இப்படி யோசிச்சுகிட்டு இருக்கீங்க ‘ என்றும் கமெண்ட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…
இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…
பிரபல பாடகியான சுசித்ரா தனது கணவர் மீதும், தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களின் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து…
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ரவீனா எப்போதும் மாடன் உடையில் வலம் வருவார். ஆனால் தற்போது வித்தியாசமாக புடவை…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்நடிகர் சூர்யா. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே…
இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'காதல்'. இந்த படத்தின்…