தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.

அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.

இப்படியான நிலையில் சுந்தர் சி சமீபத்தில் அளித்த பேட்டியில், நீங்க இயக்கிய படங்களை மீண்டும் ரீமேக் செய்தால் அதில் யாரை நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில் முதலாவதாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் மாதவன் கதாபாத்திரத்தில் அசோக் செல்வமும் நடித்தால் நன்றாக இருக்கும். கார்த்தியின் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து மேட்டுக்குடி திரைப்படத்தில் கார்த்தி நடித்த நன்றாக இருக்கும் என்று கூறினார். இறுதியாக அருணாச்சலம் திரைப்படம் பற்றி கேட்க அப்போ சூப்பர் ஸ்டார் இப்போ தளபதி தான். இதற்கு வேற சாய்ஸே இல்லை என்று அடித்து கூறினார். ரஜினி, சௌந்தர்யா, ரம்பா மற்றும் மனோரமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அருணாச்சலம். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சிறந்த திரைப்படம் முற்பட மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
