தென்னிந்திய திரையுலகில் ஒரு படத்திற்கு மட்டும் 100 கோடி சம்பளம் வாங்கும் 2வது இயக்குனர்.. யார் தெரியுமா..

By Nanthini

Updated on:

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா தி ரைஸ் திரைப்படத்தின் மூலமாக பால் இந்தியா ஸ்டார் ஆக மாறிய பின்னர் அல்லு அர்ஜுனனின் சம்பளம் முற்றிலுமாக மாறி உள்ளது. தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் இந்த படத்துக்காக அல்லு அர்ஜுன் 300 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது . புஷ்பா திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுன் சுமார் 50 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் வெளியானது.

   

படம் சூப்பர் ஹிட் கொடுத்ததால் அதன் தொடர்ச்சியாக அவர் தன்னுடைய சம்பளத்தை இரட்டிப்பாக்கி புஷ்பா 2 திரைப்படத்திற்காக சுமார் 120 கோடி பெறப் போகிறார் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் சிரஞ்சீவி குடும்பத்தை சேர்ந்த அல்லு அர்ஜுன் வளர்ச்சி சிரஞ்சீவியை சற்று பொறாமைப்பட செய்துள்ளது. ராம்சரனை விட அல்லு அர்ஜுன் வளர்ச்சி வேகமாக உள்ள நிலையில் எப்படியாவது அல்லு அர்ஜுனுக்கு மேல் ராம் சரணை கொண்டு வந்து விட வேண்டுமென சிரஞ்சீவி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்க இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அல்லு அர்ஜுன் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதித்துள்ளார். புஷ்பா இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முதல் பாகத்திற்காக இயக்குனர் சுகுமாருக்கு 25 கோடி சம்பளம் தந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடப்பதால் படத்தின் இயக்குனருக்கும் பெரும் தொகை ஒன்றை சம்பளமாக வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஓடிடி உரிமையில் பெற்ற கணிசமான தொகையுடன் சேர்த்து இயக்குனருக்கு 100 கோடி சம்பளத்தை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. தெலுங்கு திரை உலகில் ராஜமவுலிக்கு பிறகு 100 கோடி சம்பளத்தை பெறும் இரண்டாவது இயக்குனர் சுகுமார் தான். தமிழில் இன்னும் எந்த ஒரு இயக்குனரும் 100 கோடி சம்பளத்தை தொடவில்லை.

author avatar
Nanthini