குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலான யுவன் சங்கர் ராஜா.. அப்போ இனி எல்லாமே அங்கதானா?.. ரசிகர்கள் ஷாக்..!!

By Nanthini

Published on:

தமிழ் சினிமாவில் தன்னுடைய பிரத்யேகமான இசையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டு வருபவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு இருந்த போதிலும் தனக்கென தனியாக இசையால் ரசிகர்களை தூங்கவிடாமல் மற்றும் சிறப்பான தூக்கத்தை தரும் இரு வேறு வித்தைகளையும் செய்து வருகின்றார். காதலை மையமாகக் கொண்டு பல பாடல்களின் மூலம் அதிகமான ஹிட் நம்பர்களை யுவன் சங்கர் ராஜா கொடுத்து வருகின்றார்.

   

படங்களில் இசை அமைப்பது மட்டுமல்லாமல் கச்சேரிகள் மூலமாகவும் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்திற்கு இவர் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தற்போது குடும்பத்துடன் துபாயில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கேயே அதிநவீன ஒளிப்பதிவு கூடத்தையும் அவர் அமைத்துள்ளதாகவும் அங்கு பாடல் பதிவு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் அவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த படங்களுக்காக தன்னை சந்திக்க கேட்பவர்களை துபாயில் வரவழைத்து அவர் சந்தித்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தன்னுடைய பாடல்கள் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த யுவன் சங்கர் ராஜா தற்போது துபாயில் குடியேறியுள்ளதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Nanthini