#image_title
பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். முதல் முதலில் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன்z சிவாஜிz எந்திரன் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். கடந்த ஆறு வருடங்களாக ஷங்கர் இயக்கத்தில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.
கடந்த 2018-ஆம் ஆண்டு 2.0 திரைப்படம் கடைசியாக சங்கர் இயக்கத்தில் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் நேற்று ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு படம் மக்களிடையே வரவேற்பை வரவில்லை. திரைக்கதை சுவாரசியமாக இல்லை என விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது.
இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுவதால் சுவாரஸ்யம் இல்லாமல் ரசிகர்கள் சலிப்புடன் திரும்பி செல்கின்றனர். அதிலும் கமல்ஹாசனின் ஒரு முக்கிய காட்சியை 20 நாட்கள் படமாக்கி உள்ளனர். முக்கியமான காட்சி என்பதால் அதை 20 நிமிடங்கள் வருமாறு படத்தில் வைத்துள்ளனர். சங்கரைப் பொருத்தவரை ஏற்கனவே படத்தின் நீளத்தை குறைக்க மாட்டேன் என ஸ்ரிட்டாக சொல்லிவிட்டாராம். ஆனால் இப்போது நெகட்டிவ் விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது படத்தின் நீளத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் என கமல்ஹாசன் ஐடியா கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்து ஷங்கர் இந்தியன் 2 படத்தில் இருந்து 20 நிமிடங்களை குறைக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சில நாட்களில் இந்தியன் 2 படத்தின் ட்ரீம் செய்யப்பட்ட வெர்ஷன்கள் திரையரங்குகளில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இப்போது வரை இந்தியன் 2 படம் கலையான விமர்சனங்களை பெற்றுள்ளது. முதல் நாள் படம் இந்திய அளவில் 26 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…