நயன்தாராவை choose பண்ணது தான் நான் பண்ண பெரிய தப்பு.. வருத்தப்பட்டு பேசிய தனுஷ் படம் இயக்குனர்..!

By Mahalakshmi on ஜூலை 4, 2024

Spread the love

நடிகை நயன்தாராவை வைத்து அந்த படத்தை எடுத்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிரபல இயக்குனர் பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது வரை 75 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அது மட்டும் இல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய் மூலமாக குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்.

   

   

 

 

சினிமா மட்டும் இல்லாமல் பிசினஸ்சிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். அதைத் தொடர்ந்து மலையாள திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு என அனைத்து ஹீரோக்களிடம் ஜோடி போட்டு நடித்த இவர் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

மேலும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் இவர் நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் நயன்தாராவை வைத்து கஹானி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த சேகர் கமுலா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது “கஹானி என்ற திரைப்படத்தின் ரீமேக்கான அனாமிக்கா திரைப்படத்தை முதலில் இயக்க வேண்டாம் என்று தான் நினைத்தேன்.

 

ஆனால் இப்படத்தை பெண்களை மையமாக வைத்து இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் தான் நயன்தாராவை இப்படத்தில் நடிக்க வைத்தேன். இப்படத்தில் அவர் நடித்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் பாக்ஸ் ஆபிஸர் இந்த திரைப்படம் மிகப்பெரிய அடியை வாங்கியது. இப்படத்தை இன்னும் உணர்வாக எடுத்திருக்கலாம். நயன்தாராவை இப்படத்தில் நடிக்க வைத்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்று அவர் கூறியிருந்தார்.