#image_title
பிரபல இயக்குனரான பா. ரஞ்சித் கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீசான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி ரஞ்சித்துக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கபாலி திரைப்படத்தை ரஞ்சித் இயக்கியனார்.
கடைசியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படமும் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2021-ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பா. ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, சார்பேட்டா பரம்பரையில கபிலன் மனைவியா வந்த அந்த மாரியம்மாள் கேரக்டர் அப்படியே எங்க அத்தை பொண்ணு தான். நான் எப்ப போனாலும் அந்த பொண்ணு எல்லாரையும் ஹேண்டில் பண்ற விதம் அப்படி இருக்கும். என் தம்பி தான் அத்தை பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கான். அந்த பொண்ணு அவ புருஷனை திட்டுவாங்க. என்ன திட்டுவாங்க. எங்க அப்பாவையும் திட்டுவாங்க.
அவங்க என் அத்தை பொண்ணு. எங்ககிட்ட அவ்வளவு உரிமை எடுத்துக்கிட்டு சண்டை போடுவாங்க. இதெல்லாம் தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு. அதனால அந்த கதை பாத்திரங்களை என்னுடைய திரைப்படத்தில் பயன்படுத்திக்க நாம் முடிவு பண்ணேன். நான் பார்த்த பெண்கள் இவங்கதான். இவங்க மற்ற பெண்கள் மாதிரி கிடையாது. அடிச்சா திருப்பி அடிக்கிற பொண்ணுங்கள தான் நான் பார்த்திருக்கேன். திட்டினால் திருப்பி சண்டை போடுற பொண்ணுங்கள தான் நான் பார்த்து இருக்கேன் என கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…