Categories: சினிமா

15 வருடங்களுக்கு முன்பே பார்த்திபனை சந்திக்க சென்ற சுவாசிகா… அவரே பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்…!

Spread the love

லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடிகை சுவாசிகா நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் பல வருடங்களுக்கு முன்பே வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த அளவிற்கு இவர் பெயர்வெளி வரவில்லை.இதனால் மலையாள படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் லப்பர் பந்து படத்தின் மூலமாக திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய படம், ‘லப்பர் பந்து’.

இதில் ‘அட்டகத்தி’ தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்த இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இவர் விஜய் டிவி சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப் என்பவருடைய மனைவி என்பது பலரும் தெரிந்திருக்காத ஒரு விஷயம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான நீ நான் காதல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

தற்போது சுவாசிகா தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவர் குறித்து நடிகர் பார்த்திபன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில், லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகா சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஒரு ஆடிஷனில் சினிமா வாய்ப்பு தேடி வந்திருந்தார். அப்போது வேற ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லி அனுப்புறேன் என்று சொல்லி அவங்கள அனுப்பிட்டேன். பிறகு லப்பர் பந்து படத்தை பார்த்து வியந்து அவங்கள தேடி கண்டுபிடித்து நான் பேசினேன்.

அப்போ என்ன சார் என்ன மறந்துட்டீங்களா நீங்க சொல்லி கொடுத்த டயலாக் கூட எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு என்று பேசுனாங்க. இந்த 15 வருட இடைவேளையில் சுவாசிகாவிடம் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாகவே பெண்களுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான பயம் வந்து விடும். ஆனால் இந்தப் பெண் எந்தவித பயமும் இல்லாமல் சினிமாவில் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் என சுவாசிகா பற்றி பார்த்திபன் புகழ்ந்து பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

33 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

39 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

43 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

46 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

50 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

52 minutes ago