Categories: சினிமா

விஷாலின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானா?… இயக்குனர் லிங்குசாமி உடைத்த உண்மை…!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எச்பினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹிட்டே மற்றும் மமிதா பைஜூ, பாபி தியோன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்துள்ளார். ஏனென்றால் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களம் காண உள்ளார்.

இதனால் அவர் தவறவிட்ட படங்களின் லிஸ்டும் நீண்டு கொண்டே போகின்றது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் கோடிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் உள்ளார். இவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க இயக்குனர்களும் தயாராக இருக்கின்றனர். இப்படியான நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படத்தை விஜய் மிஸ் செய்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் லிங்குசாமி கூறுகையில், அதாவது சண்டக்கோழி ஸ்கிரிப்ட் முடிந்ததும் விஜய் சார் கிட்ட சொல்லப் போனேன்.

படத்தின் முதல் பாதையை கேட்டதும் போதும் என்று சொல்லி நிறுத்திவிட்டார். கதையை முழுவதுமாக கேட்டு விடுங்கள் அண்ணா என்று கூறினேன். ராஜ்கிரன் மாதிரி ஒருத்தர் உள்ளே இப்படத்தில் வந்த பிறகு எனக்கு இதுல என்ன இருக்குன்னு கூறிவிட்டார். அடுத்து சூர்யாவிடம் கதை சொன்னேன். அதுவும் நடக்காமல் போய்விட்டது. நம்மிடம் ஒருத்தர் இருக்கும் போது ஏன் வெளியில் தேட வேண்டும் என்று அதை விஷாலுக்கு பண்ணினேன் என லிங்குசாமி கூறியுள்ளார். சண்டக்கோழி படம் காமெடி மற்றும் காதல் என பக்கா கமர்சியல் படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இரண்டாவது பாகமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா?… போலீஸ் ஸ்டேஷன் சென்று திரும்பிய பூசாரி திடீர் மரணம்… குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய…

4 minutes ago

“என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… தோழிகளுக்கு கதறி அழுது ஆடியோ அனுப்பிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு… கல்லூரியில் நிகழ்ந்த கோர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…

14 minutes ago

கெஞ்சிய கர்ப்பிணி பெண்…. நள்ளிரவில் கொடூரமாக கொன்ற 21 வயது காதலன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…

19 minutes ago

திடுக்கிடும் திருப்பம்..! கண்மாயில் கொடூர சம்பவம்… போலீசாரையே குழப்பும் மர்மக் கொலை… நடுங்க வைக்கும் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…

22 minutes ago

“தாய்க்கு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ்…” மனைவியை கொன்று தற்கொலை செய்த பொறியாளர்…? பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…

27 minutes ago

ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை… தவெக அரசின் அதிரடி பிளான்…. கோயில் நிலங்களில் சோலார் மின்திட்டம்…. மாஸ் காட்டும் முதல்வர் விஜய்….!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…

30 minutes ago