#image_title
நடிகர் அஜித்தின் செயலால் இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்த திரைப்படத்தை எடுத்த வருகிறார்கள். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் முடிந்த பாடு இல்லை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
காரணம் லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் இப்படத்தை தயாரிப்பதற்கான போதிய பணம் இல்லை என்று கூறினார்கள். ஒரு வழியாக எப்படியோ படத்தை முடித்து வருகிற தீபாவளிக்கு வெளியிட்டு விடலாம் என்று முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கூட முடிவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கும் என்று கூறப்படுகின்றது. இதற்கு இடையில் தான் நடிகர் அஜித் விடாமுயற்சியின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் என கூறப்பட்டு வந்தது.
ஏற்கனவே சம்பள பாக்கி காரணமாக லைக்கா ப்ரொடக்ஷனுக்கும் அஜித்துக்கும் இடையில் பிரச்சனை இருந்ததால் அதனை இருவரும் பேசி தீர்த்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் அஜர்பைஜான் செல்ல இருக்கிறார். அங்கு போய் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு வருகிற ஒன்றாம் தேதி மீண்டும் சென்னை வந்துவிட்டு பிறகு மீதி காட்சிகளில் நடித்த இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த படப்பிடிப்பில் சண்டை காட்சி ஒன்று மீதம் இருக்கின்றதாம். அதனை இயக்குனர் மகிழ்ந்திருமேனி அஜர்பைஜானில் தான் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் நடிகர் அஜித்தை அதை மட்டும் சென்னையில் செட்டு போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று சாதாரணமாக கூறிவிட்டாராம். இது மகிழ்ந்திருமேனிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
அவரோ எடுத்தால் அங்கு தான் எடுக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கின்றார். ஆனால் அஜித் என்னால் அங்கு வாழ முடியாது. நீங்கள் எங்கு செட்டு போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கின்றார் மகிழ்ந்திருமேனி. இதை கேள்விப்படும் ரசிகர்கள் ஒரு வழியாக எப்படியாவது படத்தை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ங்கபா என்று கூறி வருகிறார்கள்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு…
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…