பா.ரஞ்சித், வெற்றிமாறன்லாம் அந்த மாதிரி படம் எடுக்கும்போது நான் இப்படி பண்ணக்கூடாதா- மேடையில் ஆவேசமாக பேசிய இயக்குனர் ஹரி!

By Arun

Published on:

பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இயக்குனராக திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரின் திரைப்படங்களுக்கு ஒரு சாரார் பல விமர்சனங்களை முன் வைத்தாலும் இவர்கள் இருவரின் திரைப்படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.

பா.ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. அதே போல் வெற்றிமாறன் தற்போது “விடுதலை பார்ட் 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

   

இந்த நிலையில் இயக்குனர் ஹரி தனது “ரத்னம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு மிக நீளமான சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட சண்டை காட்சியை படமாக்கியது குறித்து பேசினார். அப்போது, “இந்த சண்டை காட்சியை குறித்து பலருடனும் பேசியபோது இது ரொம்ப Raw-வா இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு நான் Raw-வா தான் வேண்டும், ரசிகர்கள் அவ்வாறுதான் எதிர்பார்க்கிறார்கள். வெற்றிமாறன், பா.ரஞ்சித் போன்றவர்கள் Raw-வா கொடுப்பதை பார்க்கும்போது நிறைய படங்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது உள்ளது” என்று பேசியிருக்கிறார்.

விஷால் நடிப்பில் உருவான “ரத்னம்” திரைப்படம் வருகிற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு போன்ற பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.