#image_title
பிரபல நடிகரான போஸ் வெங்கட் விமல் நடிப்பில் உருவான சார் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் மான்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் பெயரை மாற்றிவிட்டனர். சார் படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் வழங்குகிறது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் இந்த திரைப்படத்தில் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், பாடல்கள் ரிலீஸ் ஆகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் இந்த மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இதனால் போஸ் வெங்கட் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, லப்பர் பந்து படம் ஃபுல் மீல்ஸ் மாதிரி. அந்த படத்தில் எல்லாமே இருந்துச்சு. இயக்குனர் ரொம்ப அழகா படம் எடுத்திருந்தார். கொட்டுகாளி படம் லெமன் சாதம் மாதிரி. வினோத் ராஜ் அந்த படத்தை எடுத்து இருக்காரு. லெமன் சாதம் ஒரு சில பேருக்கு தான் பிடிக்கும். எல்லாருக்குமே அந்த லெமன் சாதம் பிடிக்கும்னு நம்ம சொல்ல முடியாது. ஆம்லெட் கேட்டு வந்திருப்பாங்க. முட்டை கேட்டு வந்திருப்பாங்க.
சிக்கன் கேட்டு வந்து இருப்பாங்க. அப்போ பிடிக்கலைன்னு சொல்றவன திட்டக்கூடாது. நான் எடுத்த சார் படத்த எத்தனை பேர் காரி துப்ப போறாங்கன்னு தெரியல. விமர்சனங்களை படைப்பாளி எடுத்துக்கவே கூடாது. நீங்க பண்ண அந்த புளி சாதம் பிரமாதமா இருக்குன்னு நான் சொல்லுவேன். எனக்கு புளி சாதம் ரொம்ப பிடிக்கும். படைப்பாளி வினோத் ராஜ் அதை ஒத்துக்கணும். நீங்களும் ஒத்துக்கணும். நானும் ஒத்துக்கணும். பப்ளிக்கும் ஒத்துக்கணும். அதை காண்ட்ரோவர்ஸியா கொண்டு போக கூடாது என பேசி உள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…