Categories: சினிமா

நடிகையின் அம்மா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட இயக்குனர் பாலா!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

சேது படத்தில் நடித்த அபிதா, நான் கடவுள் படத்தில் நடித்த பூஜா, அவன் இவன் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனனி மற்றும் மதுமிதா, பரதேசி படத்தில் நடித்த வேதிகா என யாரும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவில்லை. இந்நிலையில்தான் அவர் இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கதாநாயகியாக நடித்த வரலட்சுமி.

#image_title

அந்த படத்தில் கடுமையான நடனம் மற்றும் சில ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் நடித்தார். ஒரு ஆக்‌ஷன் காட்சியில் ஆர் டி சுரேஷ் அவரை நெஞ்சில் உதைப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார். அந்த காட்சியில் உண்மையாகவே சுரேஷின் கால் வரலட்சுமி மேல் பட்டுவிட மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளார் வரலட்சுமி. பின்னர் அவருக்கு ஓய்வளித்துவிட்டு அடுத்த நாள் அந்த காட்சியை படமாக்கியுள்ளார். இத்தனை கஷ்டப்பட்டு நடித்தும் தாரை தப்பட்டை திரைப்படம் சரியாக ஓடவில்லை என்பதுதான் பெரும் துயரம்.

இதையடுத்து ஒரு விருது விழாவில் வரலட்சுமிக்கு அந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்ட போது இயக்குனர் பாலா வரலட்சுமியின் அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அப்போதுதான் அவர் இந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

vinoth

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

6 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

8 மணத்தியாலங்கள் ago