பகீர்.! செந்தில் பாலாஜிக்கு சிக்கல்… மின்சாரத்துறையில் டிஜிட்டல் முறையில் ஊழல்… ரூ.13 லட்சம் கொடுத்து… அம்பலப்படுத்திய அமைச்சர் நிர்மல் குமார்…!!

Spread the love

முந்தைய தி.மு.க. ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, “விஞ்ஞான முறையில்” மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக தற்போதைய மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மின்வாரியத்திற்குத் தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்ததில் இந்த முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சந்தையில் வெறும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர்களை (மின்மாற்றிகள்), தலா ரூ.13 லட்சத்திற்கு மிகக் கூடுதல் விலை கொடுத்து மின்வாரியம் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. (CBI) விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நபர்கள் மீது தவெக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, டெண்டர் ஆவணங்கள் மற்றும் முக்கியத் தரவுகள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ‘ஹார்டு டிஸ்க்குகள்’ (Hard Disks) தலைமை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்பு இருக்கலாமா என்ற சந்தேகங்கள் கிளப்பப்படும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குச் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பூதாகரமாக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ள அவர், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்றும், கடந்த 1987-ஆம் ஆண்டு முதல் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே போன்ற டெண்டர் முறையே தங்களின் ஆட்சியிலும் தொடரப்பட்டது என்றும் கூறி அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

Swetha

Recent Posts

செம டுவிஸ்ட்..! “காட்டிக்கொடுத்த அந்த ஒரு போட்டோ” 9 வயதில் பார்த்த மாப்பிள்ளை… 24 வயதில் கணவரான அதிசயம்… இணையத்தைக் கலக்கும் இந்தோனேசிய பெண்ணின் கதை..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“இனி 30 நாட்களில்” நில உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்… பட்டா மாறுதலில் அதிரடி மாற்றம்…!!

தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: சற்றுமுன் இவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வந்தது… உடனே செக் பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு கிடைத்த தண்டனை.. “தெறி” படத்துல வருவது போல தண்டனை கொடுங்க… பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் பகீர் தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…

10 மணத்தியாலங்கள் ago

“தண்ணீர் தரலனா சீட்டை விட்டு இறங்கு!”.. அதிகாரியை நேருக்கு நேர் வெளுத்து வாங்கிய இளம் பெண்.. இந்தூரில் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…

10 மணத்தியாலங்கள் ago

குதிரை பேர CM தானே நீங்க… ஆளுநர்கிட்ட மானத்தை அடகு வச்சிடீங்களே… திமுக ITWing கடும் விமர்சனம்..!!

திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…

10 மணத்தியாலங்கள் ago