அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 19வது சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ். தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்த முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், “இந்த முறை அணியில் இளம் வீரர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, தோனி இந்த சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என்று நான் கருதுகிறேன். தேவைப்படும் பட்சத்தில், சில போட்டிகளில் அவர் ‘இம்பாக்ட் சப்’ வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது,” என்று கூறியுள்ளார்.
