தமிழக அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழகம் வந்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை இறுதி செய்யவிருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது, கூட்டணிக்குள் நிலவும் பெரும் புகைச்சலை உறுதிப்படுத்துகிறது. அதே சமயம், அதிமுகவின் பிடியைத் தளர்த்தும் நோக்கில் டிடிவி தினகரன் மற்றும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று (மார்ச் 21) டெல்லிக்கு விரைந்து அமித் ஷாவைச் சந்திக்கச் சென்றிருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணியில் இணைந்தது முதலே எடப்பாடிக்கு மறைமுகக் குடைச்சல் கொடுத்து வரும் டிடிவி தினகரன், “தமிழகத்தில் பாஜகதான் கூட்டணிக்குத் தலைமை” என்று பகிரங்கமாக அறிவித்தது அதிமுகவின் ‘தலைமை’ என்ற அந்தஸ்துக்கே விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் தனக்கிருக்கும் செல்வாக்கை அமித் ஷாவிடம் விளக்கி, தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை டெல்லி மூலம் நேரடியாக உறுதி செய்து கொள்ள தினகரன் திட்டமிட்டுள்ளார். இதே பாணியில் அன்புமணி ராமதாஸும் வட மாவட்ட வாக்கு வங்கியை முன்வைத்து காய்களை நகர்த்தி வருவதால், கூட்டணிக் கட்சிகளின் இந்தத் தன்னிச்சையான டெல்லி பயணம் எடப்பாடியை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
பாஜகவின் அழுத்தத்தால் மட்டுமே தினகரனைத் தனது கூட்டணியில் சேர்க்கச் சம்மதித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இப்போது தனது தலைமைக்கே ஆபத்து வந்துள்ளதை ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிகிறது. அதிமுகவின் ஆதிக்கத்தைச் சிறுமைப்படுத்தி, தங்களை முக்கியமான சக்தியாகக் காட்டிக்கொள்ளும் மற்ற கட்சிகளின் இந்த முயற்சியைத் தடுக்க எடப்பாடி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். குறிப்பாக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி “தலைமையில் சமரசம் இல்லை” என்ற தீர்மானத்தை நிறைவேற்றி டெல்லிக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்ப அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை டெல்லியின் அழுத்தம் கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றால், எடப்பாடி பழனிசாமி தனது ‘பிளான் B’ (Plan B) அஸ்திரத்தைக் கையில் எடுக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதாவது, பாஜகவைத் தவிர்த்துவிட்டு மற்ற சிறிய கட்சிகளைத் தனது தலைமையில் ஒருங்கிணைத்து ஒரு வலுவான திராவிட அணியை முன்னிறுத்த அவர் தயங்கமாட்டார் என்கிறார்கள். “வின்னபிலிட்டி”கார்டை பயன்படுத்தி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக்கொடுக்க முடியாது என அடம்பிடிப்பதன் மூலம் பாஜகவை இறங்கி வர வைக்க எடப்பாடி முயலலாம். இறுதிக்கட்டத் தொகுதிப் பங்கீட்டில் எடப்பாடி எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவுக்காகத் தமிழகமே காத்திருக்கிறது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…