“ஐயோ, அம்மா வலி தாங்கல”… பிரசவ வலியால் துடிதுடித்த இளம்பெண்… 108 ஆம்புலன்ஸில் சுகப்பிரசவம்.. மருத்துவ உதவியாளர் செய்த நெகிழ்ச்சி செயல்…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்பிலிவனம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருடைய மனைவி மதுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் அவருக்கு திடீரென்று பிரசவ வலி வந்துள்ளது. உடனடியாக உறவினர்கள் 108 அவசர உறுதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் மதுமதியை ஏற்றுக்கொண்டு உறவினர்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றது. வாகனம் ஆர்ப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது மதுமதிக்கு பிரசவ வலி அதிகமானது.

இதனைப் பார்த்து ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் குணசீலன் உடனடியாக ஓட்டுனரிடம் வண்டியை சாலை ஓரமாக நிறுத்த கூறினார். ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட சிறிது நேரத்தில் மருத்துவ உதவியாளர் குணசீலன் துரிதமாக செயல்பட்டு அவரே பிரசவம் பார்த்த நிலையில் மதுமதிக்கு அழகான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடந்ததை கண்ட உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தாயும் சேயும் பத்திரமாக காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் குணசீலன் மற்றும் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தனர். பிரசவம் முடிந்ததும் குழந்தைக்கும் தாய்க்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதல் உதவி அளித்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ உதவியாளர் குணசீலனுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.