“ஆஹா…” நமக்கு IAS அதிகாரி பொண்டாட்டியா?… குதித்த கணவன்… முதலிரவில் பல லட்ச நகைகளுடன் ‘வரட்டா மாமே’ என எஸ்கேப் ஆன மணப்பெண்… பேராசையால் நடந்த சோகம்…!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றி, திருமணமான முதல் இரவிலேயே கணவனின் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தப்பியோடிய பெண்ணின் விசித்திர மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான அபிஷேக் என்பவருக்கு, சமூக வலைத்தளம் மூலமாக புடான் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி போல அரசு அலுவலகங்களில் இருப்பது போன்ற போலி புகைப்படங்களை பதிவேற்றி சாதனாவும் அவரது குடும்பத்தினரும் நாடகமாடியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அபிஷேக், இருவீட்டார் சம்மதத்துடன் சாதனாவைத் திருமணம் செய்துள்ளார்.

திருமணம் முடிந்த கையோடு முதலிரவு அன்று கணவர் அபிஷேக் நன்கு தூங்கிய இடைவெளியைப் பயன்படுத்தி, தங்களுக்குப் பரிசாகக் கிடைத்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளைத் திருடிக்கொண்டு சாதனா நைசாக எஸ்கேப் ஆகியுள்ளார். மறுநாள் காலையில் விழித்துப் பார்த்த அபிஷேக், மனைவி மற்றும் நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சாதனாவின் ஊருக்கு ஆட்களை அனுப்பி விசாரித்தபோதுதான், அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியே இல்லை என்பதும், அந்தப் பெண்ணின் குடும்பமே திட்டமிட்டு பலரை இப்படி ஏமாற்றி வரும் ஒரு மோசடிக் கும்பல் என்பதும் தெரியவந்தது. மேலும், திருமணத்திற்கு முன்பே மருத்துவமனை கட்ட வேண்டும் என்று கூறி அபிஷேக்கிடம் 40 லட்ச ரூபாய் பணமும், அவரது தந்தையின் நிலத்தையும் சாதனா கேட்டு மிரட்டியுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளிவந்தது.

இதனையடுத்து, ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபிஷேக் பரேலியில் உள்ள ஃபரித்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த மெகா மோசடி குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், சாதனாவின் ஏமாற்று வேலைகள் அனைத்தும் உண்மையாக இருந்தது கண்டறியப்பட்டது. போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவாக இருந்த சாதனாவைத் தனிப்படை அமைத்துத் தேடிய காவல்துறையினர், தற்போது அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை நரேந்திர பால் சிங் மற்றும் சகோதரர் சூர்யா பிரதாப் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சாதனா இதுபோல வேறு எத்தனை பேரை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Visaka

Recent Posts

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

10 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

17 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

25 minutes ago

“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…

27 minutes ago

“இங்க நான் தான் பாஸ்; உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ…” ரயிலில் கூடுதல் கட்டணம் வசூல்… அதிகாரிகளை மதிக்காமல் பேசிய ரயில்வே ஊழியர்… கொந்தளிக்கும் பயணிகள்…!!

ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

33 minutes ago

இந்தியாவில் முதன்முறையாக யானைக்கு ஏர்-லிஃப்ட்…! “வெள்ளத்தில் மீட்கப்பட்ட 53 வயது யானை ஜோய்மோதி…” விமானம் மூலம் அனந்த் அம்பானியின் வன்தாராவிற்கு மாற்றம்…!!

நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…

40 minutes ago