BREAKING: ஒட்டுமொத்த தமிழ்நாடே சோகம்..! பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு..!!

By Soundarya on சித்திரை 20, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 25 பேரில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்து கிடப்பது காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது.

தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பறி கொடுத்த உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு கண்ணீர் மல்கக் காத்திருக்கின்றனர். தாய், தந்தை மற்றும் மகள்களை ஒரே விபத்தில் இழந்த குடும்பங்களின் கதறல் அப்பகுதி முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.