ராஜஸ்தான் மாநிலத்தின் பரபரப்பான நெடுஞ்சாலையில் (Highway) கார் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடி வந்தது. அந்த மாட்டைக் காப்பாற்ற முயன்ற கார் ஓட்டுநர், திடீரென பிரேக் அடித்ததால் காரின் கட்டுப்பாடு குலைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாலையில் முதலில் சென்ற மாருதி சுசூகி பிரெஸ்ஸா கார், மாட்டைக் கண்டதும் வேகத்தைக் குறைத்தது. ஆனால், அதற்குப் பின்னால் மிக நெருக்கமாக வந்த ஹூண்டாய் வெர்னா கார், முன்னால் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் நிலைமை கைமீறிப்போனது. மாட்டையும் முன்னால் நின்ற காரையும் மோதாமல் இருக்க ஓட்டுநர் காரைத் திருப்பியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பை (Median) தாண்டி குதித்து விபத்துக்குள்ளானது.
📍Rajasthan: A cow suddenly jumped onto the highway, nearly causing a major accident. A Maruti Suzuki Brezza slowed down, but a Hyundai Verna behind, with limited visibility, lost control and jumped the median. Lack of proper barriers and close following distance worsened the… pic.twitter.com/lvjbCxV0Nv
— Deadly Kalesh (@Deadlykalesh) April 18, 2026
இந்த விபத்து நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் ஆபத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையே விலங்குகள் திடீரென வரும்போது, ஓட்டுநர்களுக்குச் செயல்பட மிகக் குறைந்த நேரமே கிடைக்கிறது. இது போன்ற விபத்துகளில் மனித உயிர்கள் மட்டுமன்றி, வாயில்லா ஜீவன்களும் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால், நெடுஞ்சாலைகளில் முறையான தடுப்புகள் மற்றும் கால்நடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
