தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் கல்யாண். இவர் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கு கோரியோகிராப் செய்துள்ளார். கடந்த 1987-ஆம் ஆண்டு ரிலீசான பெயர் சொல்லும் பிள்ளை திரைப்படத்தில் நடன கலைஞராக என்ட்ரி கொடுத்தார். 1980-களில் பல தமிழ் திரைப்படங்களில் உதவிய நடன இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1996-ஆம் ஆண்டு ரிலீசான கல்லூரி வாசல் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் எஸ்.ஏ சந்திரசேகரின் மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்துள்ளார். இப்போது பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் ஒன் மற்றும் விஜய் டிவியின் கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகியவற்றில் நடுவராக இருக்கிறார். சமீபத்தில் சித்ரா லட்சுமணன் உடனான பேட்டியில் கல்யாண் மாஸ்டர் கலந்து கொண்டார். அப்போது சித்ரா லட்சுமணன் பெரும்பாலும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடுவர்களுக்கு சுதந்திரம் இல்லை. அவங்க சொல்லும் கருத்தைதான் நீங்கள் சொல்கிறீர்கள் என விமர்சனம் இருக்கிறது.
அது உண்மையா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த கல்யாண் மாஸ்டர், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அப்படி இருந்தது கிடையாது. நிகழ்ச்சியில கலந்துக்குற எல்லாருமே இதுல ஜெயிச்சு ஒரு பெரிய லெவலுக்கு போகணும்னு நினைச்சு வந்திருப்பாங்க. அவங்க டான்ஸ் ஆடுறது ஆடியன்ஸும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க. ஆனா அங்க ஒரு தப்பு நடக்குது. அது என்னன்னா நீங்க டிவில பார்ப்பத நாங்க அங்க நேர்ல பாக்குறது கிடையாது.
டிவில எப்படின்னா, அவங்க ஒரு தப்பு பண்ணும் போது எங்க முகத்த கிளோஸ் அப்ல காட்டிடுவாங்க. டிவில பாக்குற ஆடியன்ஸ் அவங்க கரெக்டா தான் ஆடுனாங்க. ஜட்ஜஸ் எதுக்கு தப்புன்னு சொல்றாங்கன்னு யோசிப்பாங்க. அப்பதான் நாங்க அந்த தப்பை போட்டு காமிங்கன்னு சொன்னோம். இல்லன்னா நாங்க தவறான முடிவு எடுத்த மாதிரி ஆகிரும். அதுக்கப்புறம் தான் நாங்க சொன்ன தப்ப டிவில கரெக்டா போட்டு காட்டுவாங்க. மத்தபடி வேற எதுவும் நடந்தது கிடையாது என கூறியுள்ளார்.