எடப்பாடிக்கு அடுத்த ஆப்பு ரெடி..! “அதிமுகவை அடியோடு அழித்ததே அவர்தான்!”… ஆர்.பி.உதயகுமாரின் ரகசிய அஜெண்டாவை உடைத்த சி.டி.ஆர்.நிர்மல்குமார்…!!

Spread the love

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விழாவிற்கு வரும் பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் சிறப்பாகச் செய்யப்பட்டு வருவதாகவும், நாளை வீர வசந்தராயர் மண்டபம் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். கோவில் விவகாரங்களில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்காது என திட்டவட்டமாகத் தெரிவித்த அமைச்சர், அறங்காவலர் குழுவில் உண்மையான பக்தர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்றும், கட்சி சார்ந்தவர்களுக்கோ தனிநபர்களுக்கோ அங்கு இடமில்லை என்றும் உறுதிபடக் கூறினார்.

தேசிய அரசியலில், தமிழக முதல்வர் விஜய் பிரதமருக்கான போட்டியில் மூன்றாவது இடத்தில் இருப்பது தொடர்பான கருத்துக்கணிப்பு குறித்துப் பேசிய அமைச்சர், அதற்கான முடிவை உரிய நேரத்தில் தங்கள் தலைவர் எடுப்பார் என்றார். அதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரைக் கடுமையாக விமர்சித்த அவர், ஊடக வெளிச்சத்திற்காகவே உதயகுமார் தமிழக அரசை விமர்சித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். கடந்த காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தைப் புறக்கணித்துவிட்டு சசிகலாவை முதல்வராக்கத் துடித்த அவர், தற்போது எடப்பாடி பழனிசாமியையும் ஓரங்கட்டிவிட்டு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்றும் ரகசியத் திட்டத்தில் செயல்பட்டு வருவதாகவும், அக்கட்சியின் வீழ்ச்சிக்கு அவரே முழு காரணம் என்றும் சாடினார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து முந்தைய திமுக அரசை விமர்சித்த நிர்மல்குமார், அலங்காநல்லூரில் கட்டப்பட்ட புதிய ஜல்லிக்கட்டு மைதானம் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், முந்தைய ஆட்சியாளர்களின் சுய விளம்பரத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றார். பல தலைமுறைகளாக அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாரம்பரியமான வாடிவாசல்களில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளே வரலாற்றுச் சிறப்பு மிக்கவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

Gayathri

Recent Posts

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

3 minutes ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

6 minutes ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

28 minutes ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

35 minutes ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

39 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… குடும்ப தகராறில் மாமனாரை… கட்டையால் அடித்த கொடூரம்… தடுக்க வந்த மனைவிக்கு தர்ம அடி… ஆந்திராவை உலுக்கிய கணவனின் வெறிச்செயல்…!

ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…

39 minutes ago