தஞ்சாவூர் செங்கிப்பட்டி கூட்டத்தில் விவசாயிகளுக்காகப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் உரத்தட்டுப்பாடு என்ற பேச்சிற்கே இடமிருக்காது என்றும், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை 50% வரை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர், நிலமற்ற விவசாயிகள் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் எனப் பிரகடனப்படுத்தினார். அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். விஜய்யின் இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…