கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தமிழ்நாடு அரசு உடனடியாக முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தவறினால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார்.
மேலும், மேக்கேதாட்டு அணை விவகாரத்திலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் திட்டவட்டமாகத் தெரிவித்தும், தமிழக முதல்வர் இதுகுறித்து எவ்விதக் குரலும் எழுப்பாமல் மௌனம் காப்பதாக அவர் சாடியுள்ளார். உடனடியாக இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, காவிரியின் உரிமையை மீட்டெடுக்கவும், விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
