காலையிலேயே மகிழ்ச்சி செய்தி..! சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி அட்டையாக மாற்ற வேண்டுமா..? அமைச்சர் சக்கரபாணி அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on தை 23, 2026

Spread the love

தமிழக அரசு பொங்கல் பரிசாக ₹3,000 வழங்கிய நிலையில், அரிசி அட்டை (PHH/NPHH) இல்லாத காரணத்தால் பலர் அந்தப் பலனைப் பெற முடியாமல் போனது. இது குறித்து சட்டமன்றத்தில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்ரபாணி, தகுதியுள்ள பொதுமக்கள் தங்களது சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது தாலுகா அலுவலகங்கள் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.

மேலும், இந்த மாற்றங்களை எளிதாக்கும் வகையில், துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வு நடத்துவார்கள் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். தகுதியுள்ள பயனாளிகளைக் கண்டறிந்து, விரைவாக அட்டைகளை மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் அரசு வழங்கும் நிதி உதவிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடைவது உறுதி செய்யப்படும்.