உடம்பில் அசிங்கமான தழும்புகளா?… இனி கவலையே வேண்டாம்… சமையலறையில் உள்ள இந்த 2 பொருட்கள் போதும்… டாக்டர் சொல்லும் ரகசியம்….!

By Nanthini on தை 23, 2026

Spread the love

நமது தோலில் உள்ள லேயர்கள் அளவுக்கு அதிகமாக விரிவடையும் போது, ‘டெர்மிஸ்’ எனும் தோல் அடுக்கு கிழிவதால் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உருவாகின்றன. பொதுவாக கர்ப்ப காலம், உடல் எடை திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பூப்படையும் தருணத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள் காரணமாக இத்தழும்புகள் ஏற்படுகின்றன. இவை ஆரம்பத்தில் சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் தோன்றி, பின்னர் தழும்பு போன்ற வெள்ளை நிற கோடுகளாக மாறுகின்றன.

இந்தத் தழும்புகளைப் போக்க டாக்டர் கவின் ராம் இரண்டு முக்கிய பொருட்களைப் பரிந்துரைக்கிறார். அவை காபி பொடி மற்றும் ஆலிவ் ஆயில். இரண்டு ஸ்பூன் காபி பொடியுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து ஒரு கலவையைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த எளிய இயற்கை வைத்தியம் தோலின் நெகிழ்வுத்தன்மையை மீட்கவும், தழும்புகளின் நிறத்தை மங்கச் செய்யவும் உதவுகிறது.

   

தயார் செய்த கலவையை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள இடங்களில் தடவி, சுமார் 5 நிமிடங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரை மணி நேரம் அப்படியே ஊற விட்டு, வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும்போது, தோலில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, ரத்த ஓட்டம் சீராகி, தழும்புகள் மெல்ல மறையத் தொடங்கும்.

   

இந்த முறையானது பெண்கள் மட்டுமின்றி, உடல் பருமன் காரணமாக தழும்புகளைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். விலை உயர்ந்த கிரீம்களைத் தேடிச் செல்லாமல், சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே பாதுகாப்பான முறையில் சரும அழகைப் பராமரிக்க முடியும் என்பதே இந்த வைத்தியத்தின் சிறப்பம்சமாகும்.