கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள வடவள்ளி பேருந்து நிலைய காவல் நிலைய வளாகத்தில், அதன் பெயர் பலகையை மறைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேனரில் அமைச்சர் சம்பத் குமார் மற்றும் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. காவல் நிலையப் பெயரையே மறைக்கும் வகையில் வைக்கப்பட்ட இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, “இது காவல் நிலையமா அல்லது தவெக அலுவலகமா?” என்ற கேள்விகளுடன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமானதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், விதிகளுக்குப் புறம்பாகவும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் வைக்கப்பட்டிருந்த அந்த தவெக பேனரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு வீடியோ எடுத்தாலே நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, அரசியல் கட்சியினர் பெயர் பலகையை மறைத்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொது இடங்களில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று தவெக தலைமை மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் ஏற்கனவே தொண்டர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், தலைமையின் உத்தரவையும் மீறி கீழ்மட்ட நிர்வாகிகள் காவல் நிலைய வளாகத்திலேயே பேனர் வைத்தது தவெக ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய விதிமீறல் செயல்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்பதால், எதிர்காலத்தில் இதனைத் தவிர்க்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…