விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த ஷோவில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்டு கார்டு போட்டியாளர்களும் களமிறங்கினர்.
வாரம் ஒரு எலிமினேஷன் என தற்போது வரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வந்த 5 போட்டியாளர்களையும் ஏற்கனவே இருந்த ஹவுஸ்மேட்கள் எதிரிகளாகவே பார்த்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே, தற்பொழுது பிக் பாஸ் இன்று அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளனர் என்றும், அவர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார் பிக் பாஸ். இதனால் பயங்கர அதிர்ச்சியில் உள்ளனர் ஹவுஸ்மேட்கள். இதைத் தொடர்ந்து வரப்போவது யார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் ஏற்கனவே பிரதிப் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவில்லை என்பதை உறுதி செய்துவிட்டார். இதை தொடர்ந்து இந்த போட்டியில் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா, அனன்யா ராவ் என இந்த 3 போட்டியாளர்கள் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என்பதை. இனிமேல் ஆட்டம் சூடுபிடிக்குமா?..
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…