அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இறந்ததிலிருந்து கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமைக்கு எதிரான அவர்களுடன் தொடர்பில் இருந்த தாக ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
அதன் பிறகு செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார். அதிமுக மற்றும் திமுகவின் உடைய கூட்டணிகள் ஓரளவுக்கு உறுதியான நிலையில் தமிழக வெற்றிக்கழகம் உடனான கூட்டணி மட்டும் இன்னும் உறுதியாக வில்லை. விஜய் கட்சி ஆரம்பித்தது முதல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தலைவர்களும் நடந்து கொண்டனர்
இப்படியான நிலையில் புதுச்சேரி மற்றும் கேரளாவில் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என விஜய் இடம் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று மாநிலங்களில் கூட்டணி வைக்க ஒப்புக் கொண்டால் தமிழகத்தில் கூட்டணியை உறுதிப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாம். 125 தொகுதிகள் அடங்கிய பட்டியலும் விஜய் இடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
