தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தனது கட்சியில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் எந்த ஒரு சிக்கலிலும் சிக்காமல் இருக்கும் வகையில் பார்த்து பார்த்து ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்.
இதனிடையே கே என் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதை மீண்டும் தூசி தட்ட ED முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்பி கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீதான வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல இந்த மாதம் இறுதிக்குள் சில சீனியர் அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு நடக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த செய்தி ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
