தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான ச. ஜோசப் விஜய், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் நிதி மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. ஆ. ராசா, “திட்டங்களுக்கு நிதி இல்லை என்றால் பரவாயில்லை, ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கும் நிதிக்கும் என்ன தொடர்பு? காவல்துறை உங்கள் வசம் இருக்கும்போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஏன் கால அவகாசம் கேட்கிறீர்கள்?” என முதலமைச்சர் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
ஆ. ராசாவின் இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு, தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தற்போது பதில் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் அல்லது கோவை சம்பவம் என எதற்கும் கேள்வி கேட்காமல் மௌனம் காத்த ஆ. ராசா, இப்போது மட்டும் திடீரென வீரம் பேசுவது ஏன் என்று சாடினார்.
மேலும், கடந்த கால ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால்தான் காவல்துறையின் கட்டமைப்பு தளர்வடைந்துள்ளது எனக் குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், “நீங்கள் காவல்துறையை இயக்கிய விதத்தால்தான் அதன் இன்ஜின் பழுதடைந்து நிற்கிறது; அதனைச் சரிசெய்ய தற்போதைய முதலமைச்சர் விஜய்க்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று கூறி தவெக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துக்கொண்டே, இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு…
ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலமாகுலா எல்லைப் பகுதியில், விநாயகர் சிலை விசர்ஜன விழாவை முடித்துவிட்டு மெட்டுகட்டா தண்டாவிலிருந்து ஷம்ஷாபாத் நோக்கிச்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பொதுநிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வருகைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்…
கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…
தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…