தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான ச. ஜோசப் விஜய், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் நிதி மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. ஆ. ராசா, “திட்டங்களுக்கு நிதி இல்லை என்றால் பரவாயில்லை, ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கும் நிதிக்கும் என்ன தொடர்பு? காவல்துறை உங்கள் வசம் இருக்கும்போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஏன் கால அவகாசம் கேட்கிறீர்கள்?” என முதலமைச்சர் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
ஆ. ராசாவின் இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு, தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மாணிக்கம் தாகூர் தற்போது பதில் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் அல்லது கோவை சம்பவம் என எதற்கும் கேள்வி கேட்காமல் மௌனம் காத்த ஆ. ராசா, இப்போது மட்டும் திடீரென வீரம் பேசுவது ஏன் என்று சாடினார்.
மேலும், கடந்த கால ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால்தான் காவல்துறையின் கட்டமைப்பு தளர்வடைந்துள்ளது எனக் குறிப்பிட்ட மாணிக்கம் தாகூர், “நீங்கள் காவல்துறையை இயக்கிய விதத்தால்தான் அதன் இன்ஜின் பழுதடைந்து நிற்கிறது; அதனைச் சரிசெய்ய தற்போதைய முதலமைச்சர் விஜய்க்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்” என்று கூறி தவெக அரசுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…
மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…