தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்., சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒவ்வொரு காங்., தொண்டரின் விருப்பம்.
அதையே நாங்கள் பிரதிபலிக்கிறோம். 1967-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனாலும் எங்களுக்கு அதிகப்படியான சீட்டுகள் தர வேண்டும். காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கக்கூடிய அரசு வரவேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம். தலைமை அதுகுறித்து முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
