தவெக தலைவர் விஜய்யின் உத்தரவின்பேரில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுடைய புகைப்படங்களுக்கு கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்று அல்லது நாளை ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான அனைத்து பணிகளையும் அக்கட்சியினர் செய்து வருகின்றனர். மேலும், இந்த வார இறுதியில் விஜய் கரூருக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
