மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் சில முக்கிய மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது; குறிப்பாக, குடும்பத்தலைவிகளுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவது மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மகளிருக்கும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதியை விரிவாக்கம் செய்வது போன்ற முக்கிய வாக்குறுதிகள் இன்றைய உரையில் இடம்பெறும் என பெண்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இன்றைய உரையில் மகளிர் நலன் சார்ந்த எந்தவொரு புதிய அறிவிப்புகளையும் முதல்வர் விஜய் வெளியிடாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.