பெண்கள் பற்றி சாட்சையாக பேசியதால் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட பொன்முடிக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி நேற்று வழங்கப்பட்டது. இதற்குப் பின்னால் தலைமையின் மாஸ்டர் பிளான் இருப்பதாக தெரிகிறது. அதாவது விழுப்புரத்தை கவனித்து வந்த எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூரை சேர்ந்தவர் என்பதால் கட்சி பணிகளை செய்ய சிரமம் இருக்கிறதாம். இதனால் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சிப் பணிகளை மேற்கொள்ள பொன்முடியை ஆட்டத்திற்குள் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
