BREAKING: கருணை அடிப்படையிலான பணி… இனி புதிய ரூல்ஸ்… சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 5, 2025

Spread the love

தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்ட பூர்வ வாரிசுதாரர்கள் கருணை பணிக்கோரி விண்ணப்பிக்க புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி கருணை பணிக்கோரி விண்ணப்பிக்க www.tncgpa.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை உருவாக்கி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய இணையதளம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இனிமேல் கருணை அடிப்படையிலான பணி கோருபவர்கள் இந்த வலைத்தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.