பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் ஏராளமான உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023-24 ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டுக்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் திறனாய்வு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் இடம்பெறுவார்கள். தேர்வாகும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு கல்வியாண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள மூலமாக தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான இந்த தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பதிவு நடைபெற்று வந்த நிலையை அதற்கான கால அவகாசம் ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை ஒருநாள் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் மாணவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தானாகவே முன்வந்து மீண்டும் தாய்நாட்டிற்குத்…
டெல்லியின் பரபரப்பான லஜ்பத் நகர் பகுதியில் 'கேரிமென்' (CarryMen) என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கியுள்ள விசித்திரமான சேவை, தற்போது…
மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சிப் பிரமுகரான கண்ணன் என்பவர், நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த 15 வயது…
தமிழகத்தில் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், கடந்த 10 நாள்களில் மட்டும் 4-வது முறையாக பெட்ரோல் மற்றும்…
தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளை மாற்றி அமைத்து புதிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அடுத்தகட்டமாக…
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சமீபத்திய வாரங்களில் இல்லாத அளவுக்கு…