மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் 7 ஆம் வகுப்பு சிறுமி மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமி நேற்று வழக்கம்போல வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்றுள்ளார். சிறுமி வீட்டிலிருந்து சென்ற சிறிது நேரத்தில் அவருடைய தந்தைக்கு பள்ளியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் உங்களுடைய மகள் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில், செய்தி அறிந்து உடனடியாக பள்ளியை அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடனே இந்த சம்பவம் அறிந்து பள்ளிக்கு வரைந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் குறித்து இன்னும் எதுவும் தெரிய வராத நிலையில் சிறுமியின் குடும்பத்தினர் பள்ளியை குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர்களின் துன்புறுத்தல் காரணமாகத்தான் சிறுமி இந்த முடிவை எடுத்திருப்பார் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி மாணவர்களுடைய அதிகரித்து வரும் மன அழுத்தம் குறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…