சீனாவில் நடைபெற்று வரும் உயர்மட்டப் படைத்துறை மற்றும் அரசியல் மாற்றங்களின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங், தமது முக்கிய அரசியல் ஆலோசகரான ஓய்வுபெற்ற ஜெனரல் ஜாவோ சோங்கியை (Zhao Zongqi) அவரது பதவிகளிலிருந்து நீக்கியுள்ளார். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வுக் குழுவின் உறுப்பினர் பதவி உள்ளிட்ட மூன்று முக்கிய பொறுப்புகளில் இருந்து அவர் அகற்றப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையில், சீன மத்திய ராணுவ ஆணையத்தைச் சேர்ந்த மேலும் இரு மூத்த தளபதிகளும் பதவியிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெனரல் ஜாவோ சோங்கி, சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் மிக முக்கிய அமைப்பான மேற்குப் பிராந்திய கட்டளைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர். திபெத், சின்ஜியாங் மற்றும் இந்தியாவுடனான பரந்த எல்லைப் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு இந்த அமைப்பிடமே உள்ளது. 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே 72 நாட்கள் நீடித்த கடுமையான எல்லைப் பதற்றத்தின் போது, மேற்கு போர்க்களப் பிரிவை வழிநடத்தியவர் ஜாவோ என்பதால், சர்வதேச ராணுவ அரங்கில் இவர் பெரும் கவனம் பெற்றார்.
2020 மே மாதம் கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் தீவிரமடைந்தபோதும், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் சீனப் படைகளை பெருமளவில் நிலைநிறுத்துவதில் ஜாவோ முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்க உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி வெளியான செய்திகளின்படி, இந்தியாவிற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தவர் ஜாவோ தான் எனக் கூறப்படுகிறது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜாவோ சோங்கி அதிகாரப்பூர்வமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் ராணுவப் தலைமைப் பொறுப்புகளிலும் நிலவும் உள்வீட்டு மோதல்களையும் மாற்றங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எல்லை மோதல்களில் தீவிரப் போக்குடன் செயல்பட்ட ஒரு மூத்த தளபதி மீது எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை, சீன-இந்திய எல்லை அரசியலிலும் சர்வதேச அமைப்புகளின் கவனத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…