இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக பிறந்த குழந்தைக்கும் தற்போது பால் ஆதார் கார்டு எடுக்கப்படுகிறது.
இப்படியான நிலையில் 5 வயதிற்கு மேற்பட்ட சிறார் சிறுமிகளின் ஆதாரில் பயோமெட்ரிக்கை பதியும்படி UIDAI அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐந்து வயதிற்கு முன் ஆதார் பெறுகையில் கைவிரல், கருவிழி ரேகை பதியப்படாது. ஆதலால் 5 வயது நிறைவடைந்த பிறகு அதை பதிவு செய்வது கட்டாயம் என்று கூறியுள்ளது. ஐந்து முதல் ஏழு வயது வரை இதனை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை அப்படி பதியாவிட்டால் ஆதார் ரத்து செய்யப்படும் என்று UIDAI குறிப்பிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…