கிராமத்தில் கணவன் குடிக்கச் சென்றுவிட்டதால், பிரசவ வலியோடு தனியாகக் கைவிடப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண், பல மணி நேரக் கடுமையான வேதனைக்குப் பிறகு தனது வயிற்றில் இருக்கும் குழந்தை இறந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஒரு விபரீத முடிவை எடுத்தார். மருத்துவ உதவி கிடைக்காத நிலையில், வீட்டில் இருந்த சமையலறை கத்தியைக் கொண்டு தனக்குத்தானே சிசேரியன் (அறுவை சிகிச்சை) செய்துகொள்ள அவர் துணிந்தார். மயக்க மருந்து எதுவும் இல்லாததால், அந்த கொடூர வலியைத் தாங்குவதற்கும் தனக்குள்ளே தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்கும் மூன்று கிளாஸ் கடுமையான மதுவைக் குடித்தார்.
எவ்வித மருத்துவ அறிவும் இல்லாததால், கத்தியால் வயிற்றின் எந்தப் பகுதியில் கீற வேண்டும் என்று அவராகவே யூகித்துச் செய்ய முயன்றார். இதில் துரதிர்ஷ்டவசமாக மூன்று முறை தவறான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்படியிருந்தும் விடாமுயற்சியோடு, பெரும் போராட்டத்திற்குப் பிறகு தனது சொந்தக் கைகளாலேயே குழந்தையை வயிற்றிலிருந்து வெளியே இழுத்துவிட்டு அவர் அப்படியே மயக்கமடைந்தார். சில மணி நேரங்களுக்குப் பிறகு மயக்கம் தெளிந்து கண்விழித்த அவர், உடனடியாகத் தனது மூத்த குழந்தையை அனுப்பி உதவிக்காகப் பக்கத்து வீட்டினரை அழைத்து வரச் செய்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வாகனத்திற்காகக் காத்திருந்த அந்த நேரத்திலும், ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க வீட்டில் இருந்த சாதாரண தையல் ஊசி மற்றும் நூலைக் கொண்டு அவரே தனது வயிற்றுப் பகுதி காயத்தைத் தைத்துக் கொண்டார். பார்ப்போரையே நெஞ்சை நடுங்க வைக்கும் இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்கு எந்தவொரு கிருமித் தொற்றும் ஏற்படவில்லை. தற்போது தாயும் குழந்தையும் எவ்வித ஆபத்துமின்றி முற்றிலும் நலமாக உள்ளனர் என்பது ஒரு மருத்துவ அதிசயமே. இந்த சம்பவம் வைரலாகும் நிலையில் பலரும் இது உண்மை தானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…