கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கும்பகோணம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் அப்பகுதியில் குளிர்சாதன பெட்டிகளை பழுது பார்க்கும் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு தனி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றார். இதனிடையே இவர்களுடைய வீட்டுக்கு தினமும் மாலையில் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பாடம் படிப்பதற்காக வந்து சென்றுள்ளனர். அதன்படி வழக்கம்போல அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுமி ஒருவர் விக்னேஷின் மனைவியிடம் பாடம் படிப்பதற்காக வகுப்புக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த விக்னேஷ் பாடம் படிக்க வந்த அந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். 11 வயது சிறுமி என்றும் பார்க்காமல் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக அவர் தொல்லை கொடுத்துள்ளார். படிக்க வந்த இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சிறுமி மன வேதனை அடைந்த நிலையில் உடனே பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக இதுபற்றி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…