தமிழகம் முழுவதும் உடனே நடவடிக்கை… இரவோடு இரவாக CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. அலறும் அதிகாரிகள்….!

By Nanthini on ஆடி 11, 2026

Spread the love

அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளை உடனடியாகக் களையக்கோரி தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அண்மையில் அவர் மேற்கொண்ட திடீர் ஆய்வைத் தொடர்ந்து, பல்வேறு அரசு மருத்துவமனைகளில் லஞ்சம், திருட்டு, நாய் தொல்லை மற்றும் சில தற்காலிக ஊழியர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்கேடுகளைக் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் 50 நோடல் அதிகாரிகளை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.