பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதி திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் பல லட்சம் பேர் வந்து செல்லும் பொது இடத்தில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி உருவாக்கியுள்ளது. இதனிடையே உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு சற்று முன் தூய்மை பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அதை புறக்கணித்த தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
